| மாரடைப்பால் நின்றுவிட்ட இதயத்தை மீண்டும் இயங்க வைத்து அரசு டாக்டர்கள் சாதனை! | ||
அறுவை சிகிச்சை நாளில், சிகிச்சை தொடங்கும் முன்பே, நோயாளியின் இதயத்துடிப்பு நின்று விட்டது. மயக்கவியல் மருத்துவர்கள் மற்றும் இதய அறுவை சிகிச்சை நிபுனர்கள் ஒரு மணி நேரத்திற்குமேல் போராடி நோயாளியின் இதயத்துடிப்பை மீட்டனர்.
அதன்பின் பைபாஸ் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களும் செவிலியர்களும் அளித்த தீவிர சிகிச்சையால் நோயாளி தேறி இதய நோய் குணமாகி நலமடைந்தார்.
நோயாளியின் அறுவை சிகிச்சை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் முற்றிலும் இலவசமாக அளிக்கப்பட்டது. இதற்கு தேவையான உபகரணங்களும் வசதிகளும் மருத்துவமனையின் முதல்வர் மற்றும் துறைத்தலைவரால் அளிக்கப்பட்டன.
இதயத்தின் முக்கிய அறையான இடது வென்ட்ரிகிளுக்கு தேவையான ரத்தத்தை இடது கொரனரி ரத்த நாளம் அடைப்பு ஏற்பட்டால் திடீரென இதயத்துடிப்பு நின்று உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம்.
கொரனரி ஆஞ்சியோக் ராம் சோதனையில் 5.7 சதவீதம் இந்த நோய் கண்டறியப்படும். இந்த நோய்க்கு முக்கிய சிகிச்சை பைபாஸ் அறுவை சிகிச்சை ஆகும். அறுவை சிகிச்சையால் இந்த நோய் குணமாவதுடன் திடீர் மரண அபாயமும் தவிர்க்கப்படும்.
மருத்துவர்களும் செவிலியர்களும் மற்ற பணியாளர்களும் ஒருமித்து தீவிர சிகிச்சை அளித்ததால் வெகு நேரம் இதயத்துடிப்பு இல்லாதிருந்த நோயாளி உயிருடன் மீட்கப்பட்டார். அதற்கான வசதிகள் அரசு மருத்துவ மனையில் போதுமான அளவில் உள்ளன.

ConversionConversion EmoticonEmoticon