உலகெங்கும் 'ஐ' ன் ஆக்கிரமிப்பு...!

உலகெங்கும் 'ஐ' ன் ஆக்கிரமிப்பு...! 
உலகெங்கும் பிரமாண்டமான படத்தின் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. விக்ரம் நாயகனாக நடித்துள்ள இப்பத்தில் நாயகியாக எமிஜாக்சன் நடித்துள்ளார்.

இயக்குனர் சங்கரின் பிரமாண்டமும், சீயான் விக்ரமின் வித்தியாசமான நடிப்பும், தொழில்நுட்பம் கலந்த புதிய கிராபிக்ஸ்ம்

   


படத்தை ஹாலிவுட் ரேன்ஜ்க்கு மாற்றியுள்ளது.

i movie akkramippu


தமிழ் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகமெங்கும் உள்ள சினிமா ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் ஐ படத்தை பற்றி பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியிருக்கும் கருத்தும் இணையத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் ஜெயலிலிதா, ரஜினியைவிட சங்கர் பிரபலமானவராக உணர்கிறேன் என அவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருந்தார்.

இந்த பரபரப்புக்கு மத்தியில் அமெரிக்காவில் ஐ படம் 144 தியேட்டர்களில் தமிழ் உட்பட மூன்று மொழிகளில் வெளியாவதும் புதிய ரெக்கார்ட் ஆக மாறியுள்ளது.

இதற்கு முன்பு இந்தி நடிகர் அமீர்கானின் படம் 250 தியேட்டர்களில் வெளியிடப்பட்டதே ரெக்கார்ட் ஆக இருந்தது.

சென்னை உட்பட தமிழகத்தில் படத்திற்கான தியேட்டர்கள் எல்லாமே ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது.

ரஜினியின் லிங்காவின் வசூலை முதல் நாளிலேயே "ஐ" படம் வசூலித்துவிடும் என சினிமா பக்கிகள் தெரிவிக்கின்றனர். தமிழ் படம் ஒன்று ஹாலிவுட் படத்திற்கு இணையாக எடுத்திருப்பது இதுவே முதல்முறை.

ஐ படத்தின் பிரமாண்டத்தின் முன்னால், மற்ற நடிகர்களின் படங்கள் பொங்கல் ரேஸிலிருந்து ஜாகா வாங்கியிருப்பதும் "ஐ" படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகபடுத்தியுள்ளது. குறிப்பாக அஜீத்தின் என்னை அறிந்தால் படம் பொங்கலுக்கு வெளிவராது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தி பட உலகையே திரும்பி பார்த்த விடயம் ஐ படத்தின் பிரமாண்டம்தான். அதில் இடம்பெறும் விக்ரமின் கேரக்டர்கள் மற்றும் உருவ அமைப்பு ஒட்டுமொத்த சினிமா உலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.

பொங்கலுக்கு வெளியாகவிருக்கும்  படம் ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாகும் என்பதில் சந்தேகமில்லை.


Previous
Next Post »